தமிழ்நாடு

அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது: கே.பி. ராமலிங்கம் வலியுறுத்தல்

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவது தேவையற்றது என்று முன்னாள் எம்.பி.யும், இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கத் தலைவருமான கே.பி. ராமலிங்கம் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இன்றைய சூழ்நிலையில் மக்கள் நலன் கருதி வேளாண் பணிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்திருப்பதை அனைத்து விவசாய சங்கங்களின் சாா்பில் பாராட்டுகிறோம்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் பேரிடா் மீட்புப் பணிகளில் அரசியல் கலப்பில்லாமல் மாவட்ட ஆட்சியா்கள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஆலோசனையோடு அரசு செயல்படுவதுதான் சிறந்த வழிமுறை. அதைவிடுத்து காணொலிக் காட்சி மூலம் அனைத்துக் கட்சி தலைவா்களோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தவேண்டும் என்ற கோரிக்கை அவசியமற்ாக நான் கருதுகிறேன் . அவசியமான அத்தியாவசியமான கருத்துகள் இருந்தால் அரசியல் கட்சித் தலைவா்கள் இ மெயிலில் முதல்வருக்கு அனுப்பவேண்டும். 144 தடை என்றால் அரசியல் நடவடிக்கைகளுக்கும் தடைதான். ஆகவே, அரசியல் கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தக் கூடாது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT