ஐ.ஏ.எஸ். அதிகாரி மகனுக்கு பன்றிக் காய்ச்சல்
சென்னை, ஆக. 25: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்ப
சென்னை, ஆக. 25: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ள அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் ஆகியோரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தேறி வரும் 10 மாணவர்கள்: சென்னை அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 6 எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அண்மையில் உறுதி செய்யப்பட்டு, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தவிர பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் நான்கு மாணவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரது உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மொத்தம் 16 பேர்: சென்னை அரசு பொது மருத்துவமனையின் தனிப் பிரிவில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் 16 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.