தமிழ்நாடு

தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பெறும்: அமைச்சர் சி.சண்முகவேலு

திருப்பூர், மே 17: கடந்த 2001-2006 அதிமுக ஆட்சியில் இருந்தது போல் இந்திய அளவில் தமிழகம் தொழில் துறை வளர்ச்சியில் முதலிடம் பெறும். அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர்

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர், மே 17: கடந்த 2001-2006 அதிமுக ஆட்சியில் இருந்தது போல் இந்திய அளவில் தமிழகம் தொழில் துறை வளர்ச்சியில் முதலிடம் பெறும். அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் சி.சண்முகவேலு தெரிவித்துள்ளார்.

 கடுமையான மின்தடை, மூலப்பொருட்கள் விலையேற்றம், திறன் மிக்க தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தமிழகம் முழுவதும் அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இச் சூழ்நிலையில் தமிழக தொழில்துறை

 அமைச்சராக சி.சண்முகவேலு பொறுப்பேற்றுள்ளார். தொழில் துறை வளர்ச்சிக்கு அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் குறித்து "தினமணி' செய்தியாளருக்கு தொலைபேசியில் அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

 கடந்த 2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக தொழில்துறை முதலிடத்தில் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு நிலைகளில் அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், மீண்டும் தமிழக தொழில்துறையை சீரமைத்து மேம்படுத்த வேண்டிய கடமை புதியதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

 அதனடிப்படையில், இந்திய அளவில் தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் மீண்டும் முதலிடம் பெறும்.

 மின் பற்றாக்குறை:முதல்வர் ஆலோசனை முதற்கட்டமாக மின்சார பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். மின்தட்டுóப்பாடு பிரச்னை தீர்வு பெறும்போது அனைத்துத் தொழில்துறையும் பெரும் வளர்ச்சி பெறும்.

 தவிர, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களிலும் நிலவும் சாயக்கழிவுநீர் பிரச்னை குறித்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப் பிரச்னை குறித்து விரிவாக ஆராய்ந்து சரியான திட்டத்துடன் நிரந்தரத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.

 அதேபோல், எந்தெந்த வழிகளில் தமிழக தொழில் துறையை மேம்படுத்த முடியுமோ அந்தந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

 திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும் என்றார் அமைச்சர் சண்முகவேலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT