கட்டி முடித்து திறக்கப்படாத மகளிர் சுகாதார வளாகம், நூலகம்
சிதம்பரம், ஏப். 21:சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியில் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம், நூலகம் ஆகியவை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது. ÷மேல்புவனகிரி ஒன
சிதம்பரம், ஏப். 21:சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியில் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம், நூலகம் ஆகியவை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது.
÷மேல்புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட லால்புரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2010-11-ம் ஆண்டில் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் செலவில் நூலகம் கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக செயல்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் இருப்பது வேதனையளிப்பதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.÷அதேபோன்று லால்புரம் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் பராமரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார மையம் புதிதாகக் கட்டப்பட்டு கடந்த 6 மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டப்பட்டு செயல்பாடின்றி உள்ளது.
÷எனவே திறக்கப்படாமல் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தையும், நூலகத்தையும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.