முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே தூக்கிட்ட நிலையில் பெண் சடலம் 

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத பெண் தூக்கிட்ட நிலையில் இருந்த சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On : 11 ஆகஸ்ட், 2015 at 7:38 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:48 AM

விருதுநகர் அருகே அடையாளம் தெரியாத பெண் தூக்கிட்ட நிலையில் இருந்த சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே சென்னல்குடி கிராமத்தில் பொதுமக்கள் செவ்வாய்கிழமை  காலையில் விவசாய வேலைகளுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஊருக்கு ஒதுக்கு புறமாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் 40 வயது மதிப்புடைய பெண் சடலம் தொங்கியுள்ளது. இதை பார்த்ததும் உடனே கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமிக்கு  தகவல் தெரிவித்தனர்.
 

அவர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். உடனே விரைந்து வந்த போலீஸார் பெண் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.