விருதுநகரில் மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
விருதுநகரில் உயர் மின் அழுத்த கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகரில் உயர் மின் அழுத்த கம்பத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் தவறி விழுந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் நகர் மற்றும் குல்லூர்சந்தைக்கு செல்லும் உயர் மின் அழுத்த பிரிவு கம்பத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் புதன்கிழமை மாலையில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசன்அலி(22) என்பவர் உயர் மின் அழுத்த மின்சாரம் செல்லும் வகையிலான வயர் இணைப்பு கொடுக்க மின்கம்பத்தில் ஏறினாராம். அப்போது, மின்சாரம் தாக்கியதில் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பான தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.