முகப்பு
தமிழ்நாடு

நிரம்புகிறது பாபநாசம் அணை! அணைகளுக்கு 5000 கனஅடி நீர்வரத்து

திருநெல்வேலி மாவட்டத்தில் 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 140 அடியை தாண்டியது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணைகளில் ஒன்றான பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 140 அடியை தாண்டியது. அணை புதன்கிழமை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 3 தினங்களாக மழை நீடித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை-50, பாபநாசம் கீழ் அணை-14, சேர்வலாறு அணை-31, மணிமுத்தாறு அணை-6, கடனாநதி அணை-40, ராமநதி அணை-11.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2829 கனஅடியும், சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 1000 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 883 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 468.91 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 160.53 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் காலை 9 மணி நிலவரப்படி 140 அடியை தாண்டியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 150.39 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 92.15 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடியாகவும் இருந்தது.

கடனாநதி, ராமநதி அணைகளிலிருந்து உபரிநீர் 650 கனஅடியும், பாபநாசம் கீழ் அணையிலிருந்து 1500 கனஅடியும் உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் செல்வதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →