முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் குடும்ப அட்டைக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு அரசு சார்பில் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மக்களுக்கு அரசு சார்பில் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரசு சார்பில் குடும் அட்டை ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படும்.

புதுச்சேரி அரசு சார்பில் மத்திய அரசிடம் ரூ. 182.45 கோடி நிவாரணம் கோரி ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ. 200 கோடி கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதப்படும் என்றார் முதல்வர் ரங்கசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.