நெல்லையில் தொடர் மழை: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை நீடித்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை நீடித்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பொதுமக்கள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து மொத்தம் 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தாமிரபரணி ஆற்றங்கரையோரமுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.