தமிழ்நாடு

சென்னை வெள்ளம்: வான்வழி மீட்பு நிறுத்தம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரில் வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

PTI

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரில் வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து மீட்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மேற்கொண்டு எந்தவித உத்தரவும் இல்லாததாலும், மழை, வெள்ளம் வடிந்து வருவதாலும் வான் வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிவாரணப் பணிகளும் நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டுள்ளது என இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை சுமார் 1,500 பேர் வான்வழியாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 400 மாணவ, மாணவிகள் இங்கிருந்து மீட்கப்பட்டு தில்லி மற்றும் ஹைதராபாத் நகரில் இறக்கிவிடப்பட்டனர்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் அனைத்தும் தாம்பரத்தை மையமாக கொண்டு மீட்பு பணிகளை மேற்கொண்டன. மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து ஹெலிகாப்டர்களும் மீண்டும் தங்களுக்கு இடங்களுக்கு திரும்பிவிட்டன.

அரக்கோணத்தில் கடற்படைக்கு சொந்தமான விமான தளத்திலிருந்து இன்று காலை ஒரு பயணிகள் விமானம் ஹைதரபாத்துக்கு 50 பயணிகளுடன் இயக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT