வாகன பழுது நீக்க முகாம்: யமஹா மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்கள் கால நீட்டிப்பு
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் இலவச இரு சக்கர வாகன பழுது நீக்கும் முகாம் வரும் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் இலவச இரு சக்கர வாகன பழுது நீக்கும் முகாம் வரும் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத மழை, வெள்ளம் காரணமாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின.
இவ்வாறு நீரில் மூழ்கி சேதமடைந்த இரு சக்கர வாகனங்களை பழுது நீக்க இலவச பழுது நீக்க முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி கடந்த 10 நாள்களுக்கு மேலாக நடந்து வந்த இலவச முகாம்களுக்கு (21ம் தேதி) இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, யமஹா மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவன வாகன பழுதுநீக்க முகாம் கால அளவை வரும் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளன.