முகப்பு
தமிழ்நாடு

புதுவையில் சுனாமி நினைவு தினம்: முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி

சுனாமி ஆழிப்பேரலை தாக்கிய 11-ம் ஆண்டு நினைவு தினம் புதுச்சேரியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ரங்கசாமி உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:54 AM
பகிர்:

சுனாமி ஆழிப்பேரலை தாக்கிய 11-ம் ஆண்டு நினைவு தினம் புதுச்சேரியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதல்வர் ரங்கசாமி உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேசியா அருகே கடலில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் சுனாமி ஆழிப்பேரலை உருவாகியது. இதில் இந்தோனேசியா, இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை உள்பட பல்வேறு கடலோர நாடுகளில் 2.3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாக தமிழகம், புதுவையிலும் சுனாமி தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் 26 பேரும், காரைக்காலில் 400 பேரும் சுனாமியால் உயிரிழந்தனர். கடும் பொருள்சேதமும் உண்டானது.

அவர்களின் நினைவாக மீனப்பகுதிகளில் சுனாமி நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதே போல் நிகழாண்டில் 11-வது ஆண்டாக சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்ரை காந்தி சிலை பின்புறம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுனாமி பேனருக்கு முதல்வர் என்.ரங்கசாமி மலர்வளையம் வைத்தார். தொடர்ந்து கடலில் பால் ஊற்றி மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.