முகப்பு
தமிழ்நாடு

ஜிப்மர் மருத்துவமனையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையம் துவக்கம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சுகாதாரத்தேவைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையத்தை மத்திய பல்கலை. துணைவேந்தர் டாக்டர் அனிசா பி.கான் தொடங்கி வைத்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:56 AM
பகிர்:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் சுகாதாரத்தேவைகளுக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையத்தை மத்திய பல்கலை. துணைவேந்தர் டாக்டர் அனிசா பி.கான் தொடங்கி வைத்தார்.

ஜிப்மர் மருத்துவமனை சார்பில் நோயாளிகளின் நலனுக்காக பல்வேறு முன்னோடி திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. தொலையுணர்வு சேவை மையம், செயற்கை கருவூட்டல் மையம், கல்லிரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், மாணவ, மாணவியர் உருவாக்கும் கண்டுபிடிப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், அவற்றுக்கு காப்புரிமை பெறும் வகையிலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு மக்கள் மற்றும் நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கண்டுபிடிப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.