மோசடி வழக்கு: சேலம் உருக்காலை அதிகாரிகக்கு 3 ஆண்டு கடுங்காவல்
மோசடி வழக்கில் சேலம் உருக்காலை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மோசடி வழக்கில் சேலம் உருக்காலை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இந்திய உருக்காலைக் உரிமக் கழகத்தின் சேலம் உருக்காலையில் பணியாற்றி வந்த ஸ்டோர் கீப்பர் செல்வராஜு மற்றும் அவரது உதவியாளர் ஆர். சேகர் ஆகியோர், உருக்காலையின் தேவையற்ற பொருட்களை விற்றதில் மோசடி செய்துள்ளனர்.
இவர்களது செயலால் சேலம் உருக்காலைக்கு ஏராளமான நட்டம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
இதையடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தது சிபிஐ. விசாரணை முடிந்த நிலையில், இருவருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி என். முரளிதரன் தீர்ப்பளித்தார்.