ஏற்காட்டில் மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி பலி
சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி ஊராட்சி புத்தூர் கிராமம் தங்கமணி மகன் கிருஷ்ணன் (25) வியாழக்கிழமை
சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி ஊராட்சி புத்தூர் கிராமம் தங்கமணி மகன் கிருஷ்ணன் (25) வியாழக்கிழமை மஞ்சக்குட்டை ஊராட்சி அசம்பூர் அருகில் தனியார் தோட்டத்தில் சில்வர் ஓக் மரங்களுக்கு மரக்கிளைகள் வெட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாரத விதமாக சுமார் 40 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ஏற்காடு காவல் துறை வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.