முகப்பு
தமிழ்நாடு

கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்க விழா துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

தமிழ்நாடு

கலசலிங்கம் பல்கலை.யில் பி.டெக் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்க விழா துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:00 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்க விழா துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.

பல்கலைக்கழகத்தின் டீன் அகடாமிக் தேவராஜ் பட்டய வகுப்பைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறியதாவது: யோகா வகுப்பு, பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்டுள்ள அறையில் தினமும் கலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் 2 மணி முதல் 4 மணி வரை கற்றுத் தரப்படுகிறது. மாணவர்களின் பாடதிட்ட நேரத்தில் இதற்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு முடிவில் மூன்றுநாள் செய்முறைப் பயிற்சி ஆழியாரில் உள்ள மனவளக்கலை தியானக் கூடத்தில் நடைபெறும். மற்ற தேர்வுகள் பல்கலைக்கழகத்திலேயே நடைபெறும். இதில் 9 வகையான உடற் பயிற்சிகள், 5 வகையான தியானப் பயிற்சிகள், 4 அகத்தாய்வு பயிற்சிகள், 9 தலப் பயிற்சி இந்த ஆண்டு கற்றுத்தரப்படுகிறது என்றார் அவர்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள பேராசிரியர் வெண்குமார் பேசுகையில் கூறியதாவது: இந்தப் பட்டயப் படிப்பிற்கு யோகா யூத் எம்பவர்மெண்ட என்று பெயர் என்றார். யோகா பயிற்றுநர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →