முகப்பு
தமிழ்நாடு

வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு

வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:00 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் உள்ளிட்ட மூவர் மீது இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஆராய்ச்சிபட்டி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி மகள் பானுப்பிரியா (24). இவருக்கும் கோயமுத்தூர், ஆர்.எஸ்.புரம், மேற்கு பாசியக்காரத் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் 7.7.14-ல் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது இருந்தே கணவன் மனைவிக்கிடையே வரதட்சிணை பிரச்னை இருந்து அடிக்கடி தகராறு வந்துள்ளது.

இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் தம்பி சேதுராமன் என்பவர் பானுப்பிரியாவிடம் ரூ.5 லட்சம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வந்தாராம். மேலும் பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாயும் மிரட்டினாராம்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பானுப்பிரியா புகார் செய்தார். போலீஸார் ஹரிகிருஷ்ணன், அவரது தாய் ரேணுகாதேவி, தம்பி சேதுராமன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →