முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே  இருசக்கர வாகனம் திருட முயன்ற இளைஞர் கைது

விருதுநகர் அருகே பறிமுதல் செய்து வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:30 AM

விருதுநகர் அருகே பறிமுதல் செய்து வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
  
விருதுநகர் அருகே வேலுச்சாமி நகரில் உணவு கடத்தல் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வாகனங்களில் ரேசன் அரிசிகளை கடத்தும் போது பிடிப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் வளாகத்திற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருட முயற்சித்தாரம். இதை அக்காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் பார்த்து பின்தொடர்ந்து பிடித்தாராம்.

இது குறித்து விசாரணை செய்ததில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(29) என்கிற விவரம் தெரியவந்தது.

இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் செந்தில்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.