முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில அளவிலான 20:20 கிரிக்கெட் போட்டி தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான 20:20 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் மாநில அளவிலான 20:20 கிரிக்கெட் போட்டி தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான 20:20 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:01 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா கோல்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான 20:20 போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

போட்டியை ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சாம் ஜெபராஜ் முன்னிலையில், அரிமா கோல்டு சங்கத்தின் பட்டயத் தலைவர் என்.எஸ்.வேலாயுதம் தொடங்கி வைத்தார். அரிமா மண்டலத் தலைவர் கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் வேலாயுதம் கூறியதாவது: போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 32 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் ஆகஸ்டு மாதம் 30-ம் தேதி நிறைவடையும். வெற்றி பெற்ற அணிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது என்றார் அவர்.

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் கிரிக்கெட் கிளப் அணியும், சிவகாசி டாஸ்மோனியன் கிரிக்கெட் கிளப் அணிகளும், மாலையில் மதுரை சர்வம் கிரிக்கெட் கிளப் அணியும், ராஜபாளையம் மிராக்ளஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. சங்கத்தின் பொருளாளர் த.திருப்பதிராஜ் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →