முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.பி.பி.எஸ். மாணவியை மானபங்கம் செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.பி.பி.எஸ். மாணவியை புதன்கிழமை மானபங்கம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.பி.பி.எஸ். மாணவியை மானபங்கம் செய்த இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.பி.பி.எஸ். மாணவியை புதன்கிழமை மானபங்கம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:02 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.பி.பி.எஸ். மாணவியை புதன்கிழமை மானபங்கம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், இடையபொட்டல்-சங்கு ஊரணி கரையைச் சேர்ந்தவர் முனியாண்டி மகள் காளீஸ்வரி (21). இவர் கேரளா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விடுமுறைக்கு தற்போது ஊருக்கு வந்துள்ளார். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் குரூஸ்மாணிக்கம் மகன் விமல் (எ) விமல்ராஜ் (27) என்பவர், காளீஸ்வரியின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, ஆபாசமாகப் பேசி இவரை மானபங்கம் செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அருகில் இருந்த தாயும், காளீஸ்வரியும் கூச்சலிடவே விமல் தப்பி ஓடிவிட்டாராம். இது குறித்து காளீஸ்வரி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விமல் (எ) விமல்ராஜைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →