இலங்கையால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணம் மீனவர்களின் காவல் நீட்டிப்பு
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களின் காவலை நவம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களின் காவலை நவம்பர் 20 ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஏற்கெனவே நீதிமன்ற காவலில் இருந்த அவர்களின் காவல் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததால் அவர்கள் நீதிமன்ற நடுவர் கணேஷ் ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் நவம்பர் 20 ஆம் தேதி வரை காவலில் அடைத்து நீதிபதி உத்தரவிட்டதாக தமிழக கடலோர மீனவர்கள் சங்கத் தலைவர் பி. சேசுராஜ் கூறினார்.
Advertisement
இவர்களுடன் கைது செய்யப்பட்ட 10 வேறு மீனவர்களின் காவலை நவம்பர் 19 ஆம் தேதி வரை நீடித்து கிளிநொச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது.