தமிழ்நாடு

'ஸ்கைப்' மூலம் விசாரணை: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி

இராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஸ்கைப் மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

PTI

இராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என 'ஸ்கைப்' மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விசாரணை நடத்திய நீதிபதி, போலீஸார் திருமணத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் அடைக்கலமாதா தேவாலயத்தில் இன்று (நவ. 15) ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

தேவாலய நிர்வாகத்தினருக்கும், திருமண வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் எம். ஜேசு, நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினார்.

வழக்கின் அவரசநிலையை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால், நிர்வாக நீதிபதியான ராமசுப்பிரமணியன், சென்னையைச் சேர்ந்த நீதிபதி எஸ் வைத்தியநாதனை 'ஸ்கைப்' மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சென்னையில் தன்னுடைய வீட்டிலிருந்தபடியே மைரோசாஃட்டின் விடியோ சாட்டிங் இணையதள சேவையான 'ஸ்கைப்' வழியே விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், அடைக்கலமாதா தேவாலயத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். எனினும், ஆலயத்துக்கு வெளியே எவ்வித ஊர்வலமும் நடத்தகூடாது என்றார்.

முன்னதாக வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, இ-மெயில் மூலம் நீதிபதிக்கு அனைப்பி வைக்கப்பட்டன.

நீதிபதியின் தீர்ப்பு குறித்த தகவல்கள் இராமநாதபுரம் காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணிக்கு இ-மெயில் செய்யப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 'ஸ்கைப்' மூலம் நடைபெற்ற முதல் விசாரணை இதுவே என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT