வாலாஜாவில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி
வாலாஜப்பேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புலிதாங்கல் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வாலாஜப்பேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட புலித்தாங்கல் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையில் புலித்தாங்கல் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அமுதா (55) என்ற மூதாட்டி சிகிச்சை பலனியின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவரது மாமியார் சாரதா (70), மகன் சம்பத் (35) ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் வாலஜப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.