முகப்பு
தமிழ்நாடு

இலங்கை பிரச்னையில் மோடி இரட்டைவேடம்: நாராயணசாமி

இலங்கை தமிழர்கள் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டைவேடம் போடுவதாக காங்கிரஸ் பொதுச் ளர் வி.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:

இலங்கை தமிழர்கள் பிரச்னையில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டைவேடம் போடுவதாக காங்கிரஸ் பொதுச் ளர் வி.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2009-ல் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை செய்து அறிக்கை அளித்திருந்தது. அதில் சர்வதேச நீதிபதிகள் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. அந்நாட்டு அரசால் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நல்லெண்ண விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், ராணுவத்தினர் பல்வேறு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கை அரசு அந்த அறிக்கையையே மூடி முறைக்க திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பிரச்னையில் பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.