முகப்பு
தமிழ்நாடு

அன்னவாசல் அருகே சாலைவிபத்து வாலிபர் சாவு

அன்னவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

அன்னவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

அன்னவாசல் அருகேயுள்ள சத்தியமங்கலத்தச் சேர்ந்தவர் தங்கையா மகன் பாண்டியன்(35), விவசாயி இவர் தனது இருசக்கர வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சத்தியமங்கலம் - புதுகை சாலையில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்று திரும்புகையில், திருச்சியிலிருந்து ராமநாதபுரம் சென்ற கார் மோதியதில், தலையில் காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வெள்ளனூர் போலிஸார் வழக்கு பதிந்து கார் ஓட்டுநர் பரமகுடியைச் சேர்ந்த ஷாஜகான் மகன் ராஜா அப்துல்லாவை(23) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.