இடப்பிரச்சனை: தந்தை வீட்டுக்கு தீ வைத்த மகன் கைது
இலுப்பூர் அருகே இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதத்தில் தந்தை வீட்டுக்கு தீ வைத்த மகன் உள்பட இருவரை இலுப்பூர் போலிஸார் கைது செய்தனர்
இலுப்பூர் அருகே இடப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதத்தில் தந்தை வீட்டுக்கு தீ வைத்த மகன் உள்பட இருவரை இலுப்பூர் போலிஸார் கைது செய்தனர்.
இலுப்பூர் அருகேயுள்ள முருககோன்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை (75) விவசாயி, இவரது மகன் பி. செல்வம் (35) இவருக்கு சேர வேண்டிய பங்கு இடத்தை பிச்சை தரமறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாக ஆத்திலிருந்த செல்வமும், பிச்சையின் அண்ணன் மகன் சி. மூக்கனும் சேர்ந்து கடந்த அக், 26-ம் தேதி பிச்சைக்கு சொந்தமான வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதில் வீட்டில் இருந்து 16 வளர்ப்பு ஆடுகள், 2 இருசக்கர வாகனம் உள்ளிட்வைகள் தீயில் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து இலுப்பூர் காவல் நிலையத்தில் பிச்சை அளித்த புகாரினை தொடர்ந்து வழக்கு பதிந்த போலீஸார் செல்வம், மூக்கன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.