தமிழ்நாடு

நெல் அரிசி வியாபாரிகளையும், பட்டு சேலை உற்பத்தியாளர்களையும் சந்தித்த மு.க.ஸ்டாலின்

ஆரணியில் நெல் அரிசி வியாபாரிகளையும், பட்டு சேலை உற்பத்தியாளர்களையும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.

பி.ஜெயச்சந்திரன்

ஆரணியில் நெல் அரிசி வியாபாரிகளையும், பட்டு சேலை உற்பத்தியாளர்களையும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.

தமிழகம் முழுவதும் நமக்கு நாமே சுற்றுப்பயணம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆரணிக்கு வந்திருந்தார். ஆரணி அருகே இரும்பேடு பகுதியில் உள்ள நெல் அரிசி ஆலையில் நெல் அரிசி வியாபாரிகளை சந்தித்து குறைகளையும், கோரிக்கையையும் கேட்டார். பின்னர் அவர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியது,

தமிழகத்தில் இதுவரை 166 சட்டமன்ற தொகுதிகளின் மக்களை சந்தித்து விட்டேன். தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளையும் சேர்த்து 174 தொகுதி மக்களை சந்தித்து நிறைவு செய்துள்ளேன். ஏறக்குறைய பாதிக்கும் மேல் தாண்டிவிட்டேன். மீதம் உள்ள தூரத்தை உங்கள் உணர்ச்சிகளை பார்க்கும்போது அனைத்தையும் பார்த்துவிடுவேன். இந்த பயணம் எங்கு சென்றாலும் நமக்கு நாமேதான்.

ஆட்சியில் இருப்பவர்கள்தான் மக்கள் குறைகளை கேட்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் குறைகளை கேட்டறியும். சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களை மிரட்டி சசிகலா வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டு வெளியே வந்துள்ளார்கள். உடனே அடுத்த தவறையும் செய்துள்ளார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழுத்தலைவர்கள், ஊராட்சித்தலைவர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை மக்களை சந்திக்க சட்டம் கொண்டு வரப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT