முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் அருகே இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் கைது

விருதுநகர் அருகே ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை மானபங்கம் செய்து விட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

Updated On : 2 செப்டம்பர், 2015 at 7:51 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:06 PM

விருதுநகர் அருகே ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை மானபங்கம் செய்து விட்டு திருமணத்திற்கு மறுத்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் அருகே இனாம்ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவரின் மகள் ஐஸ்வர்யா(19). சூலக்கரை பகுதியைச் சேர்ந்த பசும்பொன் என்பவரின் மகன் அசோக்குமார்(26). இப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை வேலை செய்து வருகின்றனர். அதையடுத்து கடந்த ஓராண்டாக பழகியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இனாம்ரெட்டிபட்டியில் வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி குல்லூர்சந்தை-வள்ளிகுளம் சாலைப்பகுதியில் மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று மானபங்கம் செய்தாராம்.

அதையடுத்து, பகல் முழுவதும் அப்பகுதியில் சுற்றி திரிந்துவிட்டு இரவில் இனாம்ரெட்டிபட்டி விலக்கில் வாகனத்தில் இறக்கி விட்டு எங்கள் வீட்டில் உன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறியதோடு, மறந்துவிடவும் கூறினாராம்.

Advertisement

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மானபங்கம் செய்து விட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த அசோக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.