முகப்பு
தமிழ்நாடு

அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:41 AM
பகிர்:

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த சிவனேஸ்வரன், மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் ஆவணங்களின்றி இந்தியா வந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்த அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டனர். பின்னர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிற்கு மாற்றம் செய்தனர். கடந்த 2012-வது ஆண்டு முதல் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தங்களை அகதிகள் முகாமில் தங்கவோ அல்லது வெளியிடத்தில் தங்கவோ அனுமதித்து சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் இவர்கள் சிறப்பு முகாமிற்குள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →