முகப்பு
தமிழ்நாடு

பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்

காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறைதலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் முழு நேரதினக்கூலி ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் மேற்கொண்டனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி பொதுப்பணித்துறைதலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் முழு நேரதினக்கூலி ஊழியர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை முற்றுகை போராட்டம் மேற்கொண்டனர்.

பொதுப்பணித்துறையில் 500-க்கு மேறப்ட்ட காலியிடங்கள் உள்ளன. இவற்றில் 25 சதவீதம் பொதுப்பணித்துறை தினக்கூலி ஊழியர்களைக் கொண்டும், மீதம் 75 சதவீதம் பணியிடங்களை வெளிநபர்களைக் கொண்டும் நிரப்ப நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை முழுநேர தினக்கூலி ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டனர். பொதுச் செயலாளர் சாதிக் பாட்சா, தலைவர் முரளி ஸ்டாலின்

ஆகியோர் தலைமையில் 150-க்கு மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சாதிக்பாட்சா கூறியதாவது:

பொதுப்பணித்துறை காலிப்பணியிடங்களில் 100 சதவீதம் முழுநேர தினக்கூலி ஊழியர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும். வெளிநபர்களைக் கொண்டு நிரப்பக்கூடாது. நாங்கள் 11 ஆண்டுகளாக பொதுப்பணித்துறையிலேயே தினக்கூலி ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறோம்.

வெளிநபர்களை நியமித்தால் நாங்கள் பாதிக்கப்படுவோம். இப்பிரச்னைக்கு நிர்வாகம் உரிய முடிவு காணும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றார் சாதிக்பாட்சா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.