தமிழ்நாடு

தொடரும் அஞ்சலி: உணவு-குடிநீர் விநியோகம்

DIN

சென்னை கடற்கரை சாலையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதிகாலையில் இருந்தே மக்கள் அதிகளவு கூடியதால், அவர்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது நாளாக வரிசை: ஜெயலலிதா நினைவிடத்தில் புதன்கிழமையைப் போன்றே வியாழக்கிழமையும் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். பலர் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு குடும்பங்களாக வந்திருந்தனர்.
காலையிலேயே அதிகளவு வந்ததால் அவர்களை காவல் துறையினர் கட்டுப்படுத்தினர். அனைவரையும் வரிசையாக அனுப்பி வைத்தனர். மேலும், அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்பட பலரும் மொட்டை போட்டு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பல பெண்கள் கதறி அழுது கண்ணீர் விட்ட காட்சி நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது. கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வழிபட்டனர்.
உணவு-குடிநீர் ஏற்பாடு: பொது மக்கள் அதிகம் கூடியதால் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. அதிமுக சார்பில் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் அளிக்கப்பட்டன.
மேலும், அத்தியவாசிய மருத்துவ உதவிகளும் செய்து தரப்பட்டன. பலர் உணவுப் பொட்டலங்களை வாங்கி அங்கே அமர்ந்து சாப்பிட்டுச் சென்றனர்.
பொதுப்பணித் துறை தயார்: எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகே ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தை தனிப்பட்ட முறையில் அடையாளப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கடற்கரை ஓரத்தில் மிகப்பெரிய அளவுக்கு கட்டுமானத்தைக் கட்ட முடியாது என்பதால், சிறிய அளவிலான கட்டுமானத்தைக் கட்ட பொதுப்பணித் துறையின் கட்டுமானப் பொறியியல் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான வடிவமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. அவை இறுதி செய்யப்பட்ட பிறகு நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூா் அருகே சாலை விபத்து: 4 போ் காயம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

இந்தியா்களுக்கான கட்டணமில்லா சுற்றுலா விசா நீட்டிப்பு: இலங்கை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு விளக்கம்: ஏபிவிபி அழைப்பு

SCROLL FOR NEXT