தமிழ்நாடு

ரயில் தடம்புரண்ட சம்பவம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

IANS

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525),  வேலூா் மாவட்டம்  திருப்பத்தூர் அருகே உள்ள  சோமநயக்கன்பட்டி-தச்சூர் என்ற இடத்தில் இன்று காலை 4.15 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 11 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்த பயணிகள் பேருந்துகள் மூலம் பெங்களூரு அனுப்பி வக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டு மிகப்பெரிய விபத்து நேரிட்டும், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT