தமிழ்நாடு

மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை சந்திக்கிறேன்: ஆசாத்

மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

PTI

வரவிருக்கும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கூட்டணி ஏற்பட கூடும் என தகவல்கள் வரும் நிலையில், மரியாதை நிமித்தமாகவே கருணாநிதியை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

சென்னை வந்துள்ள காங்கிரஸ் தலைவர் நாளை திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.கருணாநிதியை சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆசாத், கருணாநிதியுடன் சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது. ஒவ்வொரு முறையும் சென்னை வரும் போது திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க தவறுவதில்லை என்றார் ஆசாத்.

ஆசாத், தன்னுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் முகுல் வாசினிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை அழைத்து செல்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் கூட்டணியில் 2004 ஆம் ஆண்டு இணைந்த திராவிட முன்னேற்ற கழகம், இலங்கை பிரச்சனையால் கூட்டணியிலிருந்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியேறியது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டன.

இந்நிலையில் தமிழகத்தை ஆளும் அதிமுகவை வீழ்த்தும் நோக்கில் வலிமையான கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக தலைவர் கருணாநிதி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெறும் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT