முகப்பு
தமிழ்நாடு

நெல்லை: அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ. 2.50 லட்சம் நகை திருட்டு

பாளையங்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:42 PM
பகிர்:

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை வி.எம். சத்திரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரான இவர் செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குரங்குனி கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளவதற்காக சென்றிருந்தாராம்.

புதன்கிழமை காலை வீடு திரும்பிய ராமச்சந்திரன் அதிர்ச்சியடைந்தார். வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோ மற்றும் சமையலறையில் டப்பாவில் மறைத்து வைத்திருந்த 12 பவுன் எடையுள்ள தங்கநகை, ரொக்கப் பணம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2.50 லட்சம்.

மர்ம நபர்கள் குத்துவிளக்கினால் பீரோவை உடைத்து தங்கநகைகளை திருடியுள்ளனர். தகவலறிந்த மாநகர காவல் துணை ஆணையர் பி. ராஜன், சம்பவ நடைபெற்ற வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →