முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பேருந்து மோதி இருவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பேருந்து மோதி இருவர் சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், தர்மாபுரம்மடம், அடிக்கால்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஸ்வநாதன் (24). நாங்குனேரி தாலுகா, களக்காடு, எம்.கே.கே.இந்திராநகரைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் முத்துவேல்செல்வம் (34).

விஸ்வநாதனும், முத்துவேல்செல்வமும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். வாரத்திற்கு ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் திருப்பூரிலிருந்து சொந்த ஊருக்குச் சென்று வருவார்களாம்.

திங்கள்கிழமை மதியம் இருவரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விலக்கு அருகே வந்து கொண்டருந்த போது மதுரை நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஸ்வநாதனும் முத்துவேலும் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனியார் பேருந்தை ஓட்டி வந்த வலையபட்டியைச் சேர்ந்த சு.பழனிக்குமார் (29) என்பவரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →