அன்னவாசல் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பறிமுதல்
அன்னவாசல் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமாநாடு மாநில நெடுஞ்சாலை குடுமியான்மலை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் எஸ். தமிழ்ச்செல்வன்(கூட்டுறவு சார்பதிவாளர்) சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜாமுகமது உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.16 லட்சம் இருந்துள்ளது. விசாரணையில் ஓட்டுநர் பி. ரங்கநாதன்(29), ஏ.டி.எம். இயந்திரங்களில் வைப்பதற்கான பணம் என்று கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.