பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு சுஜான்புர் நகர்ப் பகுதியில் கார் ஓட்டுநர் துப்பாக்கி முனையில் கீழே இறக்கிவிடப்பட்டு கார் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, பதான்கோட் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காரை கடத்தியவர்கள் பயங்கரவாதிகளா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சாலையோரம் நின்றிருந்த மூன்று பேர் காரை வழிமறித்துள்ளனர். போர்ட் பிகோ காரை ஓட்டி வந்த நபர், காரை நிறுத்தியது ஏன் என்று கேட்ட போது, அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்கள், அவரிடம் இருந்து காரை பறித்துக் கொண்டுள்ளனர்.
இரண்டு பேர் காரை ஓட்டிச் சென்ற நிலையில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டாதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
பதான்கோட் - ஜம்மு நெடுஞ்சாலையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் சுஜான்புர் அமைந்துள்ளது.
இதே போன்றுதான், கடந்த ஜனவரி 2ம் தேதி காரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.