விராலிமலையில் அனுமதியின்றி மதுபாட்டில் பதுக்கியவர் கைது
விராலிமலை: விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில் பதுக்கி விற்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள கோமங்களம் பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோமங்களம் ஏழுமலை மகன் பெருமாள்(46) அரசு மதுபான பாட்டில்களை அனுமதியின்றி பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததாக கைது செய்தனர், விற்பனைக்கு வைத்திருந்த 60 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிகின்றனர்.