கடலூர்: வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள்; சிறப்பு ஏற்பாடுகள் இல்லை
கடலூரில் உள்ள வங்கிகளில் காலை முதலே ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றனர்.
பண்ருட்டி: கடலூரில் உள்ள வங்கிகளில் காலை முதலே ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை வாங்கிச் சென்றனர்.
அனைத்து வங்கிகளிலும் நீண்ட வரிசையில்பொதுமக்கள் காத்திருந்தனர். பணம் செலுத்தவும், பெறுவதற்கும் ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
ஆனால், பொதுமக்களின் வசதிக்காக வங்கிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
சில வங்கிகளில் பெண்களுக்கு, ஆண்களுக்கு என தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வங்கிகளில் இரு தரப்பினருக்கும் ஒரே வரிசைதான் பின்பற்றப்படுகிறது.
ஆனால் வங்கிகளுக்கு இன்னமும் ரூ.2000 ரூபாய் நோட்டுக்கள் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் இதே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருப்பதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.