தமிழ்நாடு

நீதிமன்றங்களில் கேமரா அமைக்க நிதித் துறை ஒப்புதல்: நீதிமன்றத்தில் அரசு தகவல்

அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க தமிழக அரசின் நிதித் துறை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

DIN

அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா அமைக்க தமிழக அரசின் நிதித் துறை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் எஸ்.காசிராமலிங்கம் தொடர்ந்து பொதுநல வழக்கு மீதான விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை தொடர்பாக பதில் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதில், அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக அக்டோபர் 17-ஆம் தேதி அனுப்பப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்க அரசு நிதித் துறையும் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான அரசாணையை வெளியிட 2 வார கால அவகாசம் அளிக்க வலியுறுத்தியிருந்தார். இதை ஏற்றுகொண்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காற்றின் தரக் குறியீடு 459 என்ற மோசமான நிலையை எட்டியது!

“சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

மெஸ்ஸியுடன் ராகுல்காந்தி! | Hyderabad

WWE-யிலிருந்து ஓய்வுபெற்றார் John Cena!

இந்து அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

SCROLL FOR NEXT