பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி: புதுச்சேரியில் நாளை துவக்கம்
தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி புதுச்சேரி வள்ளலார் சாலை (45 அடி சாலை)-ல் உள்ள வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.
புதுச்சேரி: தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி புதுச்சேரி வள்ளலார் சாலை (45 அடி சாலை)-ல் உள்ள வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.
தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக்கழகத் தலைவர் டாக்டர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ்., கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். 19.10.16-ல் தொடங்கும் இக்கண்காட்சி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அனைத்து கைவினைப் பொருள்களுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கைவினைப் பொருள்கள், ஜவுளி உற்பத்தி துணிகள், நகைகள், செம்பு சிலைகள், பாரம்பரிய விளக்குகள், தஞ்சாவூர் கலைப் பொருள்கள், மரச்சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியம், ராஜஸ்தான் ஓவியம், மரக்கூழால் ஆன கைவினைப் பொருள்கள், நாடு முழுவதும் தருவிக்கப்பட்டுள்ள கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும்.
இத்தகவலை பூம்புகார் விற்பனையாக மேலாளர் சி.கோபிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.