சென்னை: சென்னையை அடுத்த தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி, சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை சந்திப்பு போன்று தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
தாம்பரத்தில் அமைக்கப்படும் 3வது ரயில் முனையம் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்தார்.