முகப்பு
தமிழ்நாடு

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை!

வழிப்பாதையை தடுத்து தெருவை மூடி இடையூறு செய்வதாக புகார் கூறி, திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

திருநெல்வேலி: வழிப்பாதையை தடுத்து தெருவை மூடி இடையூறு செய்வதாக புகார் கூறி, திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் புளியங்குடி நகராட்சி 8 ஆவது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஊர் நாட்டாமை பேச்சிமுத்து தலைமையில் திரண்டு முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியது: புளியங்குடி நகராட்சியில் 8 ஆவது வார்டில் தாழ்த்தப்பட்ட பறையர் சமுதாயத்தை சேர்ந்த 500 குடும்பங்கள் அங்குள்ள முப்புடாதி அம்மன் கோயில் முதல் தெரு, 2 ஆவது தெரு, 3 ஆவது தெருக்களில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு சமுதாயத்தினர் முப்புடாதி அம்மன் கோயில் 3 ஆவது தெருவை பொது வழிப்பாதையாக பயன்படுத்த முடியாத வகையில் தடுத்து தெருவை மூடி இடையூறு செய்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் இந்து ஆதிதிராவிட சமுதாய பொதுநல சேவை சங்கம் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →