நெய்வேலியில் கன்னட சபா முற்றுகை: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 200 பேர் கைது
நெய்வேலியில் கன்னட சபாவினை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி: நெய்வேலியில் கன்னட சபாவினை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் தமிழகள் மீதும் அவர்களின் உடமைகள் மற்றும் நிறுவனத்தின் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், நெய்வேலியில் உற்பத்தி செய்ப்படும் மின்சாரத்தை
கர்நாடகத்திற்கு வழக்கக்கூடாது என்று வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலர் உ.கண்ணன் தலைமையில் நெய்வேலியில் உள்ள கன்னட சபாவை முற்றுகையிட முயன்றனர்.
நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து வட்டம் 9-ல் உள்ள என்.எல்.சி பள்ளியில் அடைத்து வைத்துள்ளனர். இதே போல் பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.