பண்ருட்டி அருகே சுடுகாட்டு பாதை அமைக்கக்கோரி சாலை மறியல்: 40 பேர் கைது
பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டு காலணி பகுதியில் வசிப்பவருக்கு சுடுகாட்டு பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி: பண்ருட்டி அடுத்துள்ள நடுவீரப்பட்டு காலணி பகுதியில் வசிப்பவருக்கு சுடுகாட்டு பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடுவீரப்பட்டு இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சி கிளைச்செயலர் ராஜேந்திரன் தலைமையில் 10 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை, நடுவீரப்பட்டு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.