புது தில்லி: காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவின் திருத்தம் கோரும் மனுவை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.
காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏராளமான மனுக்களை விசாரித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு தரப்பில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரிப்பது தேவையற்றது என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.