சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சருக்கு சொந்தமான புதுக்கோட்டையில் உள்ள கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. அமைச்சர் முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான புகார் வந்ததையடுத்து இந்த சோதனை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.