தமிழ்நாடு

மாஃபா பாண்டியராஜனின் முன்ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு!

சென்னை ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில்...

DIN

சென்னை: ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மாஃபா பாண்டியராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ள ஆர்.கே நகர் தொகுதிக்கான  தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சவப்பெட்டியில் இருப்பது போல் செய்யப்பட்ட பொம்மையொன்றுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அந்த பெட்டியின் மீது தேசியக் கொடியும் போர்த்தப்பட்டிருந்தது. 

இதன் காரணமாக தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெறவிருந்த நிலையில் தற்பொழுது ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிக வரி விதிப்பால் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார்: டிரம்ப்

கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியுடன் அன்புமணி சந்திப்பு!

தில்லி மசூதி ஆக்கிரமிப்பு இடிப்பு: வன்முறையில் 5 காவலர்கள் காயம்!

தேவாரம்: சாக்கலூத்து மெட்டு மலைச்சாலை அமைக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்!

டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT