விழுப்புரம்: விழுப்புரம் அருகே கப்பூரில் தெண்பெண்ணை ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரியை மூடக்கோரி விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அளவுக்கதிகமாக மணல் அள்ளுவதாக ஆட்சியருக்கு புகார் வந்துள்ளதை அடுத்து ஆட்சியர் சுப்பிரமணியன் இந்த தடை உத்தரவை பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
பொதுமக்கள், விவசாயிகள் இந்த மணல் குவாரியை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.