தமிழ்நாடு

இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது: பொன். ராதாகிருஷ்ணன்

தினமணி

இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. நினைவு இல்லம் விவகாரத்தில் ஜெயலலிதா உறவினர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்றார். மேலும் இரு அணிகளும் இணைந்தால் அதிமுகவுக்கு நல்லது எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 44 ஆண்டுகளாக வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். 

இதையடுத்து அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT